வெள்ளி, 24 ஜூலை, 2009

இப்போதாவது குரல் கொடுப்போம்

இப்போதாவது குரல் கொடுப்போம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்தகைபோம்.
சத்தம் இல்லாமல் நடக்கும் தமிழின அழிப்பு

3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இராணுவக் கட்டுபாட்டில் நடைபிணங்களாக

பட்டினியாலும் நோயாலும் வாரத்திற்க்கு 1400 பேர் செத்து கொண்டிருக்கும் நிலையில்
தமிழர்களைக் காப்பாற்ற வரும் ஐ.நா அமைப்புகளையும் சிங்கள அரசு முகாம்களுக்குள் அனுமதிக்காத நிலையில்

முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்ற செய்தியே வெளியில் வராமல் இந்திய அரசு கட்டுப்பாடில் இயங்கும் சன் டீவி,ராஜ் டிவி தினமலர் போன்ற ஊடகங்கள் பார்த்துகொள்கின்றன,மேற்க்குலக ஊடகங்களை சிங்கள அரசு அனுமதிப்பதில்லை.

ஈழத்தமிழர்கள் மண்ணின் பூர்வ குடிகள் இன்று அவர்களுக்கு மிச்சம் இருக்கும் ஒரே நம்பிக்கை நாம் மட்டும் தான்.

சாட்சி இல்லாமல் நடந்த தமிழினப் படுகொலை

மொத்தமாக 1 லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு 1.5லட்சம் தமிழர்களை ஊனமாக்கி 85000 தமிழ்ச்சிகளை விதைவையாக்கியது சிங்கள அரசு.

ஐ.நாவால் தகைசெய்யபட்ட கொத்துகுண்டுகள் இராசாயனகுண்டுகள் நச்சுக்குண்டுகள் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தியது சிங்கள் இராணுவம்.

மே 17,18ல் விடுதலைபுலிகள் சரனடைய முன்வந்தபின்பும் கூட 30,000 தமிழர்களை துப்பாக்கியால் சுட்டும் ,புல்டோசரால் ஏற்றியும் கொன்று உடல்களை எரித்து சாம்பலை கடலில் வீசியது சிங்கள இராணுவம்.

இன்றுவரை உலகப்பத்திரிக்கைகளை உள்ளே விடாமல் உண்மையை மறைக்கப்பார்க்கின்றது சிங்கள அரசு.

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிடைக்கவிடாமல் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் செயல்படுகின்றது.

மரங்களும், விளங்குகளும் கூட அழிவதை தடுக்கும் உலகநாடுகள் ஈழத்தமிழர்கள் கொள்ளப்படுவதை இன்றுவரை அனுமதிக்கின்றன ஏன்??

ஈழத்தமிழர்களுக்கு நாதியில்லை என்றா??
தமிழகத்தமிழர்கள் இரக்கமற்றவர்கள் என்றா??

பக்கத்துவீட்டில் சோறு இல்லாவிட்டாளே பொங்கியதில் பாதி தந்து பசி ஆற்றும் நாம் ஈழத்தமிழர்களை அநாதைகளாகவிடப் போகிறோமா???
கண்ணகி பிறந்த மண்ணுக்கு சொந்தகாரர்கள் நாம் இராஜபக்சே கூட்டத்தை கூண்டிளேற்று என்று நீதி கேட்க நமமை விட்டால் யார் இருக்கிறார்கள்?

ஐ.நாவை ஈழத்தில் நேரடியாக தலையிட சொல்வோம்!

கொள்ளப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான நீதியை கேட்டிடுவோம்!

ஈழத்தமிழர்கள் விரும்புவது சிங்களனோடு சேர்ந்து வாழ்வதையா இல்லை பிரிந்து வாழ்வதையா இல்லை பிரிந்து போவதையா? என்பதை அவர்களிடமே கேட்க சொல்வோம்.

உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி மிச்சம் இருக்கும் தமிழர்களையாவது காப்பாற்றுவோம்!


தமிழர் விரோத இந்திய அரசை தட்டிக்கேட்போம்

தமிழ்நாட்டு மீனவர்கள் என்ன காக்கை குருவிகளா??

நாம் வேலைக்கு சென்றால் வீடு திரும்புவோம் என்ற பாதுகாப்பு உண்டு, ஆனால் தமிழ்நாட்டு கரையோர மீனவர்கள் கடலுக்குபோனால் கரைதிரும்புவது நிச்சயமற்ற ஒன்று
சிங்கள இனவெறி கடற்படையால் கைது செய்யபடலாம் அடித்து அவமானப்படலாம், சுட்டுகொள்ளப்படலாம் என்று எதுவும் நடக்கலாம் இதுவரை 400 மீனவர்களை சுட்டுகொன்று உள்ளது சிங்கள் கடற்படை, அதை வேடிக்கை பார்த்துள்ளது இந்திய கடற்படை, இந்திய அரசோ இலங்கை அரசை ஒப்புக்கு ஒரு வார்த்தைக்கூட கண்டிக்காமல் துரோகம் செய்கின்றது ஒரு காக்கை மின் கம்பி பட்டு செத்து போனால் 100 காக்கைகள் பறந்து ஒப்பாரிவைக்கும் ஆனால் நாம் ??
ஈழத்தமிழர்கள் எங்கள் சொந்தங்கள்
கொலைக்கார சிங்களனிடம் இருந்து உயிர் தப்பித்து கடல் கடந்து தமிழ்நாட்டில் கரை சேர்வது தமிழர்கள் நாம் இருக்கிறோம் என்ற ஒரே நம்பிக்கையில் தான் ஆனால் அவர்களை அகதி முகாம்களில் மூன்றாம் தர குடிமக்களாக வைத்து இருக்கிறது நம் நாடு.
ஒரு மாபெரும் இனபடுகொலை நடத்து கொண்டு இருந்த போது கூட அவர்கள் சத்தம் போட்டு ஒப்பாரிவைக்கக்கூட முடியாமல் அவர்களின் வாயையும் கையும் கட்டிபோட்டது இந்தியா

வந்தவர்களில் சிலரை புலிகள் என்ற சந்தேகத்திற்க்கு உரியவர்கள் என்று சொல்லி காலவரையற்ற விசாரனை இன்றி செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு கருங்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

செங்கல்பட்டு பூந்தமல்லி முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் நம்மை நம்பி வந்த உறவுகளை அடிப்படை வாழ்வுரிமையோடு வாழவைக்கவேண்டியது நமது கடமை சிங்கள இனவெறி அரசை காப்பாற்றும் இந்திய அரசு 1லட்சம் ஈழத்தமிழர்களை இலங்கையில் கொன்றது மட்டும் இன்றி அன்றாடம் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுகொன்றும் சிங்கள இனவெறி இலங்கை அரசுக்கு இந்திய அரசு இனப்படு கொலைக்கு துணைபோனது மட்டும் இன்றி இன்றுவரை ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக செயபட்டுவருகிறது அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஈழதமிழர்களை காக்க முன்வந்தாலும் அதை தடுக்கிறது இந்திய அரசு. இந்த தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டை இப்போதாவது இந்திய அரசு நிறுத்தவேண்டும் இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்ளவேண்டும்

தமிழர்களை கொள்வதையே தொழிலாக கொண்ட இலங்கை அரசின் தூதரகத்தை சென்னையில் இருந்து அகற்றவேண்டும்

சிங்கள இனவெறி அரசுக்கு எந்த நிதிஉதவிகளையும் செய்ய கூடாது

ஆயுதங்கள் தருதல் உலவு தகவல்களை தருதல் இராணுவ ஆலோசனைகள் வழங்குதல் முதலியவற்றை நிறுத்த வேண்டும் .

தமிழர்களும் இந்தியாவின் குடிமக்களே!!!!

photo exhibition tamil